ஈ.வி.கே. சம்பத் 46-வது நினைவு தினம் ; ஈரோட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரியாதை!

 
evks

மறைந்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.சம்பத்தின் 46-வது நினைவு தினத்தையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்தின் 46-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், அரசு தலைமை மருத்துவமனை அருகே பெருந்துறை சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ-வுமான திருமகன் ஈவெரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் ஆர்.விஜயபாஸ்கர், திருச்செல்வம், எச்.எம்.ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

evks

முன்னாள் மாவட்ட தலைவர் ஈ. ஆர்.ராஜேந்திரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை தலைவர் ஜெ.சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்களான ராஜேஷ் ராஜப்பா, கே புனிதன், வி.எஸ்.ஈஸ்வரமூர்த்தி, எஸ் மோகன், அம்மன் மாதேஷ், பாஸ்கர் ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்களான டி.கண்ணப்பன், ஆர்.கே.பிள்ளை, ரவி என்கிற விவேகானந்தன், இரா கனகராஜ்,ஏ. வின்சென்ட், கராத்தே யூசுப், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பி.ஏ.பெரியசாமி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஆர் புவனேஸ்வரி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் எஸ் முகமது யூசுப், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவு துணைத் தலைவர் குளம் எம் ராஜேந்திரன்,  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே.என்.பாஷா, மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.