நூல் விலை உயர்வு எதிரொலி... ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்பு!

 
textile

நூல் விலை உயர்வு எதிரொலி... ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிப்புநூல் விலை உயர்வு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் குறைவாக வந்திருந்ததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனிமார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, மொத்த விலையில் ஜவுளியை கொள்முதல் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் ஒரு கோடி வரையிலும், விசேஷ நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். 

textile

இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட ஜவுளி சந்தை வியாபாரம், தொற்று குறைந்ததால் படிப்படியாக சீராகி வந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பஞ்சு மற்றும் நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் ஜவுளி சந்தை வியாபாரம் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. மேலும், மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், நேற்று கூடிய ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்புடன் சுமாராக நடைபெற்றது. தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வர உள்ளதால் சில்லரை வியாபாரம் 25 சதவீதம் வரை நடைபெற்றது. எனினும் வெளி மாநில வியாபாரிகள் குறைவான எண்ணிக்கையில் வந்திருந்ததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.