வையம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!

 
dead

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக மின் கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள தவளைவீரன்பட்டி ஊராட்சி பெரிய வெள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் சின்னதுரை(42). இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று பெரிய வெள்ளப்பட்டியை சேர்ந்த ராமன் என்பவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்இணைப்பு வழங்க முயன்றார்.

vaiyambatti

அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி போலீசார், சின்னதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.