திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு!

 
home guard

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்களுககு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம் பழனி, கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஊர் காவல் படைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி - 10ஆம் வகுப்பு தேறிய, தவறிய ஆண்கள் மட்டும். வயது வரம்பு - 20 வயது முதல் 45 வயது வரை. விளையாட்டு வீரர்கள், சுய தொழில் புரிவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு வரும் டிசம்பர் 10ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு, திண்டுகுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும்.

jobs

தகுதி வாய்ந்த நபர்கள் திண்டுக்கல்லில் உள்ள ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 8667001936, 8667431022 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.