ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு கூட்டம்!

 
erode bjp

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் இன்று ஈரோடு கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பட்டியல் அணி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் இந்தியன் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாநில செயலாளர் அய்யாசாமி, மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ராதிகா, முன்னாள் எம்.பி., சௌந்திரம், தெற்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், முன்னாள் தலைவர் சிவசுப்பிரமணியம், சிறுபான்மை அணி மைக்கேல், ஊடகப்பிரிவு அண்ணாதுரை உட்பட திரளான பட்டியல் அணியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

bjp

இந்த செயற்குழு கூட்டத்தில் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பட்டியல் இன மக்கள் வாழும் பல பகுதிகளில் இன்னும் முறையாக பட்டா வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிகளை அணுகும்போது, அவர்கள் வெகுவாக அலைக் கழிக்கப்படுவதாகவும், அத்தகைய சிரமங்கள் கலையப்பட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், திமுக எம்.பி., ஆ ராசா இந்து சமயத்தை பற்றி அவதூறாக பேசியதை கண்டிப்பதாக கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.