"அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு மீண்டும் அனுமதி பெற காலஅவகாசம் நீட்டிப்பு" - விருதுநகர் ஆட்சியர் தகவல்!

 
virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு மீண்டும் அனுமதி பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக்கட்டிடங்களுக்கு இத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ(3)) துறை நாள்.14.06.2018-ல் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை (Online)-ல் 14.06.2018 முதல் 13.09.2018 வரை மற்றும் 22.03.2021 முதல் 04.04.2021 வரை காலத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகி இசைவு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

virudhunagar

மேலும், மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் Online-ல் விண்ணப்பிக்க ( www.tn.gov.in/tcp) 01.07.2022 முதல் கூடுதலாக 6 மாத காலத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.  அரசாணையில் தெரிவித்துள்ள ஆவணங்களை சமர்ப்பித்து இசைவு பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தொடர்புக்கு, துணை இயக்குநர், விருதுநகர் மாவட்ட அலுவலகம், கதவு எண். பி-70, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மனைப்பிரிவு, மதுரை சாலை, சத்திரரெட்டியபட்டி, விருதுநகர் மாவட்டம் - 626 001, என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.