குடும்பத்தினர் எதிர்ப்பால் விஷம் குடித்த கள்ளக்காதலர்கள் உயிரிழப்பு... பெரம்பலூர் அருகே சோகம்!

 
dead

பெரம்பலூர் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பால் விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வெள்ளனுர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி கனகா(29). இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை அறிந்த அண்ணாதுரை, கனகாவை கண்டித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி கனகா, மணிகண்டன் ஆகியோர் வீட்டில் இருந்து மாயமாகினர்.

perambalur

குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கனகா கிடைக்காததால் இதுகுறித்து அண்ணாதுரை பெரம்பலுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இருவரையும் தேடி வந்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த மணிகண்டன் - கனகா ஜோடி, அருமடல் அருகேயுள்ள பகுதியில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். மயங்கிய நிலையில் கிடந்த இருவரையும், மருவத்தூர் போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் கடந்த ஞாயிற்றுக்கிழமையும், கனகா திங்கட்கிழமையும் அடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். குடும்பத்தினர் எதிர்ப்பால் கள்ளக்காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெள்ளனுர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.