பவானிசாகர் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

 
poison

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளைய கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). விவசாயி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துளது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தரகாறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ரவி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

generic erode

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு வாழ்க்கையில் விரக்தியடைந்த ரவி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார். மறுநாள் காலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்படவே குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது தான் பூச்சி மருந்தை குடித்த விபரத்தை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரவியின் தம்பி திருமலை அளித்த புகாரின் அடிப்படையில் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.