திண்டுக்கல்லில் வரும் 30ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
dindigul

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளார்கள்.

paddy farm

அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்கு முறை விற்பனை கூட நடவடிக்கைகள், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் விவசாய கடன் சம்மந்தப்பட்ட தங்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.

கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நபர்களும் தவறாது முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியும் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும், என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.