திருவண்ணாமலையில் நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 2022-ஆம் ஆண்டு மே மாதத்திற்கான திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டம் மே 20ஆம் தேதி (நாளை) காலை 10.30 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில், வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள், பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.