மகன் இறந்ததால் தந்தை குலதெய்வ கோவிலில் தூக்கிட்டு தற்கொலை... மணப்பாறை அருகே சோகம்!

 
suicide

மணப்பாறை அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை குல தெய்வ கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள குதிரைப்பட்டியை சேர்ந்த ராமகவுண்டர் மகன் செல்லத்துரை(45). விவசாயி. இவரது மகன் பாஸ்கரன். இவர் கடந்த ஓராண்டுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் மீது அதிக பாசம் வைத்திருந்த செல்லத்துரை, அவரது மறைவால் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீ. இடையப்பட்டியில் உள்ள தனது குல தெய்வமான உப்பிலியான் கோவிலுக்கு சென்று, அங்குள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

valanadu

இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், வளநாடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்லத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் உப்பிலியானை கும்பிட்டும் தங்கள் குலம் அழிந்ததாகவும், அதனால் தனக்கு வாழப்பிடிக்கவில்லை என்றும், தனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.