காஞ்சிபுரம் அருகே பைக் மீது லாரி மோதல்... பெண் காவலர், மகன் பலி!

 
accident

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் காவலர் மற்றும் அவரது 2 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உமாதேவி(26). இவர் காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் தக்ஷுத் என்ற மகன் உள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு உமாதேவி பணி முடிந்து கணவர் மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். சென்னை - பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, முன்னால் சென்ற 2 கார்களை மோதிவிட்டு, ராஜாவின் இருசக்கர வாகனம் மீது மோதியது. 

kanchipuram

இதில் பலத்த காயமடைந்த காவலர் உமாதேவி, அவரது மகன் தக்ஷுத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், காயமடைந்த ராஜாவை மீட்டு  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், உயிரிழந்த உமாதேவி, குழந்தை தக்ஷுத் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி