ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்!

 
sathunavu

காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஈரோடு காளைமாடு சிலை அருகே நேற்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுப்புலட்சுமி, செல்வி, மஞ்சுளா , சபானா, ஆஸ்மி, மணிமேகலை, சாந்தி , கவுரி, கொடிமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா வரவேற்றார். பாஸ்கர் பாபு தொடக்க உறையாற்றினார். 

sathunavu

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும் என்றும்,  ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கவும், பணிக்கொடை சத்துணவு அமைப்பாளருக்கு ரூ. 5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்கவும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், 100-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.