கோவையில் மயங்கிய நிலையில் கிடந்த பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை

 
elephant

கோவை பெரியதடாகம் பகுதியில் உடல்நல குறைவு காரணமாக மயங்கிய நிலையில் கிடந்த பெண் யானைக்கு, வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

கோவை ஆனைகட்டி சாலை பெரியதடாகம் பகுதியில் பெண் காட்டுயானை ஒன்று உடல்நல குறைவினால் நடக்க முடியாமல் மயங்கிய நிலையில் தரையில் படுத்திருந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். 

elephnat

மேலும், இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே, மயங்கிய நிலையில் படுத்துக்கிடக்கும் யானையை பார்க்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அந்த பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.