விருதுநகரில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - ஆட்சியர் மேகநாத ரெட்டி தகவல்!

 
virudhunagar

விருதுநகரில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 5ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் SSC GD மற்றும் SSC CHSL ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 45 ஆயிரம் பணிக்காலியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வரும் 5ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்ப வகுப்புகள் நடைபெற உள்ளது.

45,000 பணியிடங்கள்..  SSC  வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

மேலும், இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நுலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562 293613 அல்லது onlineclassvnr@gmail.com என்ற மின்னஞ்சலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர்  மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.