காதலன் இறந்ததால் வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காதலன் இறந்ததால் வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் பாண்டி திலகா (21). இவர் மதுரையை சேர்ந்த பிரபு என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பிரபு மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதனால் மதுப் பழக்கத்தை கைவிடும்படி பாண்டி திலகா வற்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த பிரபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். 

dead body

காதலன் மறைவால் பாண்டி திலகா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் பாண்டி திலகா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.