குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... நாமக்கல் அருகே சோகம்!

 
suicide

நாமக்கல் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகேயுள்ள இளநகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் நளினி(23). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  மாசக்கல்பட்டியை சேர்ந்த ரகுபதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் நளினி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும், நளினியின் வீடு திறக்காமல் இருந்துள்ளது.

namakkal

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டு கதவை தட்டியுள்ளனர். ஆனால் உள்ளே இருந்து பதில் வராததால், கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, நளினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நளினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து நளினியின் பெற்றார் அளித்த புகாரின் பேரில், வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 2 ஆண்டுகளில் நளினி இறந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.