பெரம்பலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; பெண் உள்பட இருவர் கைது!

 
pocso

பெரம்பலூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கரம்பியம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேந்திரன். இவரது மனைவி சங்கரியின், உறவினர் வசந்த் (30). இவர் மகேந்திரன் வீட்டிற்கு வந்து சென்றபோது, 17 வயது சிறுமிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வசந்த் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமடைந்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

arrest

அதன் பேரில், போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வசந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த சங்கரியும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.