சிவகங்கை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - தம்பதி பலி!

 
accident

சிவகங்கை அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தை சேர்ந்தவர் வீரகாளை. இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் கோவை வேளாண் கல்லூரியில் படித்து வந்தார். கொரோனா விடுமுறைக்கு பின் நேற்று கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், தம்பதியினர் இருவரும் மகளை மதுரைக்கு அழைத்துச்சென்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தனர்.

sivagangai

பின்னர் இருவரும் காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். திருப்புவனம் அடுத்துள்ள சித்தாலங்குடி என்ற இடத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் மீது, சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில்,  வீரகாளை, அவரது மனைவி கவிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த பூவந்தி போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.