ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல் - இருவர் பலி!

 
accident

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கச்சிரான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். விவசாயி. இவர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருவரங்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். ஆலங்குடி அடுத்த ஆயிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது சண்முகவேல் வாகனத்தின் மீது, எதிரே புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து துக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த சண்முகவேல், ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

pudukkottai GH

தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இருவர் பலியான சம்பவம் கச்சிரான்பட்டி பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.