கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை!

 
suicide

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் பிரகாஷ் (54). இவர் பொன்னத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இதனிடையே, பிரகாஷுக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் பின்புறமுள்ள பழடைந்த கட்டிடத்தில் பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

dead body

மறுநாள் காலை பிரகாஷை காணாததால் குடும்பத்தினர் தேடியபோது, அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பர்கூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.