விமானப்படை விமானத்தில் 2 கி.மீ உயரத்திலிருந்து வானில் பாராசூட் மூலம் குதித்து ஊட்டி அரசுக்கல்லூரி மாணவி சாதனை!

 
ooty

ஊட்டி அரசுக்கல்லூரி என்சிசி மாணவி கோகிலவாணி விமானப்படை விமானத்தில் 2 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பாரா சூட் மூலம் வானில் குதித்து சாதனை படைத்தார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கோகிலவாணி. இவர் நீலகிரி மாவட்டம் உதகை அரசு கல்லூரியில் பி.ஏ சுற்றுலாவியல் துறையில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் கல்லூரியில் என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் இணைந்துள்ள கோகிலவாணி, பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப் பயிற்சியில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பங்கேற்றனர்.

ooty

உடல் தகுதி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் மாணவி கோகிலவாணி மட்டும் தேர்வாகி, இன்று புது டெல்லியில் இந்திய விமானப்படையின் பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் வானில்  குதித்து சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். மாணவி கோகிலவாணிக்கு, பெற்றோர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.