ஓசூரில் குளத்தில் மூழ்கி அரசுப்பள்ளி மாணவர் பலி!

 
drowned

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி அரசுப்பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கணபதி நகரை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது 14 வயது மகன் திருப்பதி. இவர் அந்திவாடியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.. இந்த நிலையில், நேற்று பள்ளி விடுமுறை காரணமாக திருப்பதி, அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் அந்த பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். தண்ணீரில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனை கண்டு சிறுவர்கள் கூச்சலிடவே, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

hosur

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் குளத்தில் இறங்கி தேடினர். சுமார் 2 மணி நேர தேடதலுக்கு பின்னர் அவர்கள் சிறுவன் திருப்பதியை  சடலமாக மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை பத்மநாபன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.