ராமநாதபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை!

 
murder

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆயிரவேலி பகுதியை சேர்ந்தவர் ஜெயமங்கலம். இவரது மனைவி பூங்கோதை. ஜெயமங்கலம் கடந்த ஆண்டு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில்,  பூங்கோதை  ஆட்டோ ஓட்டுநரான தனது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பூங்கோதையின் மகன் நேற்று காலை வழக்கம்போல் சவாரிக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்தார்.

ramnad gh

அப்போது, வீட்டில் காயங்களுடன் பூங்கோதை உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியந்த அவரது மகன் தகறி அழுதார்.  தொடர்ந்து, இதுகுறித்து  திருவாடானை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. கார்த்திக் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து, திருவாடானை போலீசார், பூங்கோதையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாடானை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.