விழுப்புரம் ​​​​​​​அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திய ரூ.10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - ஓருவர் கைது

 
vilupuram

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்திய ரூ.10 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பம்பக்கரை பகுதியில் நேற்று உதவி ஆய்வாளர் மருதப்பன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது, வாகனத்தில் இருந்த மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

vilupuram

இதனை அடுத்து, அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் மற்று கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த கண்டாச்சிபுரம் போலீசார், இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் சித்தாமூரை சேர்ந்த ஏழுமலை என்பவரை கைது செய்தனர்.  தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.