மனைவி கண் முன்னே பேருந்து சக்கரத்தில் விழுந்து பலியான கணவர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
cbe

கோவையில் மனைவி கண்முன்னே கணவர் பேருந்து சக்கரத்தில் விழுந்து பலியான சம்பவம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது /வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை சித்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்ப்பதற்காக அரசுப்பேருந்தில் சென்றனர். வரதராஜபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருவரும் இறங்கினர். பயணிகள் அனைவரும் இறங்கியதை ஓட்டுநர் பேருந்தை எடுத்துச்சென்றனர். பேருந்து நகர தொடங்கியதும், அங்கு நின்ற பாலமுருன் திடீரென பேருந்தின் சக்கரத்தில் விழுந்தார். அப்போது பேருந்து சக்கரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

cbe

தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மயங்கி விழுந்து உயிரிழந்தாரா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில்,இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.