திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய எஸ்.பி., ஆக கார்த்திகேயன் பதவியேற்பு!

 
tvmalai

திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் எஸ்.பி. ஆக பணிபுரிந்து வந்த பவன்குமார் ரெட்டி, சமீபத்தில் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  மாவட்டத்தின் புதிய எஸ்.பி. ஆக, சென்னை கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையராக பணிபுரிந்த கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தின் 26-வது எஸ்.பி. ஆக கார்த்திகேயன் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு, பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

tvmalai

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., கார்த்திகேயன்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களையும் குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கை முழுமையாக காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.