பெரம்பலூர் அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதல்... அண்ணன், தம்பி பலி!

 
accident

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அண்ணன், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குன்னியூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன்கள் சசிகுமார்(41), பாண்டியன்(38), இவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டம் உடும்பியம் பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்தனர். இதற்காக கிருஷ்ணாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருவரும் பணிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், நேற்று சகோதரர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

perambalur gh

பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் சென்றபோது இவர்களது வாகனத்தின் மீது எதிரே வந்த சுமை ஆட்டோ அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சசிகுமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு  மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.