திண்டுக்கல்லில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது; 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 
dgl

திண்டுக்கல் நகரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை கைதுசெய்த தனிப்படை போலீசார், அவரிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்.எஸ் நகரை சேர்ந்தவர் குமார் (39). கடந்த 22ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திச்சென்ற நிலையில், அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இதேபோல், திண்டுக்கல் நாயுடு மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் தேனி ஆனந்தம் ஜவுளிக்கடையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர் திருடி சென்றதாக, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.

arrest

இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் குறித்து மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின் பேரில், திண்டுக்கல் நகர் உட்கோட்ட தனிப்படையினர் தீவிர தேர்தல் வேட்டை நடத்திவந்தனர். மேலும், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், 3 திருட்டு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், போலீசாரின் விசாரணையில் அவர் திண்டுக்கல் தெற்கு ரதவீதி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவராஜ் (58) என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து, நேற்று தனிப்படை போலீசார் தேவராஜை கைதுசெய்து, அவரிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.