கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரனுடன், மாவீரன் பொல்லான் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு!

 
eshwaran

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் 217ஆம் ஆண்டு நினைவு தினவிழாவில் பங்கேற்க, கொ.ம.தே.க தலைவர் ஈஸ்வரனுக்கு, மாவீரன் பொல்லான் பேரவை சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது

கொங்கு மண்ணில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலை கவுண்டருடன் இணைந்து போரிட்டவர் மாவீரன் பொல்லான் மாதாரி. ஆங்கிலேயர்களால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட மாவீரன் பொல்லானின் 217ஆம் ஆண்டு நினைவு தினம், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் நல்ல மங்காபாளையத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க மாவீரன் பொல்லான் பேரவை சார்பில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

eshwaran

இதன்படி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஈ.ஆர். ஈஸ்வரனிடம், நேற்று மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நினைவு தினவிழா அழைப்பிதழ் வழங்கினர். அப்போது, சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் வரலாற்று புத்தகத்தை பரிசளித்த வடிவேல் ராவணன், அருந்ததியர் தனி உள் இடஒதுக்கீட்டை 3-லிருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்ததற்கு தனது நன்றியை தெரிவித்தார்.