"கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என தவறான தகவல் பரவி வருகிறது"... நாமக்கல் ஆட்சியர் எச்சரிக்கை!

 
namakkal

கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிரப்படுவதாகவும், இதனை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறையில் Animal Handler and Animal Handler cum Driver ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு எனவும், வேலைவாய்ப்பு மூலம் ஆட்கள் எடுக்கப்படுவதாகவும் சம்பளம் முறையே ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை  நிர்ணயிக்கப்பட்டு 90 மணிநேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை  வழங்கப்படும் எனவும், விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடுமாறும்  Animal Handler and Animal Handler cum Driver ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தலா 150 பணியிடங்கள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 பணியிடங்கள் வீதம்)  எனவும் புலனம் (whatsapp) செயலி மூலம் பகிரப்பட்டு வருகிறது.

Image

மேற்படி, தகவல்கள் அனைத்தும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு தொடர்பற்றவை எனவும், தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேற்படி தகவல்களை பொதுமக்கள் யாவரும் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.