மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி வெட்டிக்கொலை... மனைவி, மகன் வெறிச்செயல்!

 
murder

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே போதையில் தகராறு செய்த தொழிலாளியை வெட்டிக்கொன்ற மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள புலியூர் பகுதியை ராஜேந்திரன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு முத்து என்ற மகன் உள்ளார். மதுப் பழக்கத்துக்கு அடிமையான ராஜேந்திரன், குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ராஜேந்திரன், மனைவி பாண்டியம்மாளிடம் தகராறு செய்துள்ளார்.

arrest

அப்போது, அவருடன் இருந்த மகன் முத்து தந்தையை கண்டித்துள்ளார். அப்போது, தந்தை - மகனிடை வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள், அவரது மகன் முத்து ஆகியோர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ராஜேந்திரனை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திருப்புவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கொலையான ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பாண்டியம்மாள், அவரது மகன் முத்துவை கைது செய்தனர்.