வேளாங்கண்ணியில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகள் சலோமினா மேரி(31). இவருக்கும், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சலோமினா மேரி, கணவரை பிரிந்து பெங்களுருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 

velankanni

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். பின்னர் கொய்யாதோப்பு பகுதியில் உள்ள லியோ என்பவருடைய வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சலோமினா மேரி தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்து வந்த சலோமினாவின் தந்தை பிரான்சிஸ், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதன் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சலோமினா மேரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில்  தொங்கவிடப்பட்டாரா? என விசாரணை மேற்கொண்டனர்.