மணப்பாறை அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... கோட்டாட்சியர் விசாரணை!
மணப்பாறை அருகே திருமணமான இரண்டரை ஆண்டுகளில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மொண்டிப்பட்டி களத்துப்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு. கூலி தொழிலாளி. இவருக்கும், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த சங்கரி(22) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று சங்கரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் கணவர் வடிவேலிடம் உள்ளார். இதனை அடுத்து, வடிவேல் சோடா வாங்கி கொடுத்த நிலையில், அதனை குடித்த சிறிது நேரத்தில் சங்கரிக்கு மயக்கம் ஏற்படுள்ளது. இதனை அடுத்து, அவரை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சங்கரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சங்கிரியின் பெற்றோர், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சுங்கரி உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான இரண்டரை ஆண்டுகளில் சங்கரி உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.