திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 
dead

செங்கம் அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சு. ஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் புஷ்பா. இவருக்கு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி செங்கம் அடுத்த பெரியகல்தாம்பாடி பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் புஷ்பாவை துன்புறுத்தி வந்தததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை வீட்டில் இருந்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வரதட்சணை தருவதாக கூறி புஷ்பாவின் பெற்றோர், அவரை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த நிலையில், நேற்று வீட்டில் புஷ்பா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

tiruvannamalai gh

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புஷ்பாவின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர். திருமணமான 2 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.