நெல்லை அருகே கட்டிட தொழிலாளி மர்ம மரணம்... மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை!

 
dead

ல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பேச்சிமுத்து(27). கட்டிட தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த சுதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் அம்பாசமுத்திரம் முடப்பாலம் பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை பேச்சுமுத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சுதா உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.

nellai

அதன் பேரில், அம்பாசமுத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, பேச்சிமுத்துவின் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். இதனால் அவர் குடும்ப தகராறில் 
 கொலை செய்யப்பட்டரா? என மனைவி சுதாவை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.