சின்னமனூரில் வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - இருவர் கைது!

 
Murder

தேனி மாவட்டம் சின்னமனூரில் வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற, சக தொழிலாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் மான்சி (22), நித்திஷ்குமார், பாபு சிங் உள்ளிட்ட 5 பேர் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று பணி முடிந்து நண்பர்கள் அனைரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாபுசிங், நித்தீஷ்குமார் ஆகியோர் பிரதீப் மான்சியை கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளனர். 

chinnamanur

இதில் பலத்த காயமடைந்த பிரதீப் மான்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவ்ல அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனுர் போலீசார், கொலையான பிரதீப் மான்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் பாபுசிங், நித்திஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.