பெருந்துறையில் அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள்... எம்எல்ஏ ஜெயக்குமார் வழங்கினார்!

 
peru

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட 108 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு, அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெருந்துறை ஜே.கே. ட்ரேடர்ஸ் அலுவலகத்தில் மூங்கில் காற்று அறக்கட்டளை சார்பில் 108 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார், மூங்கில் காற்று அறக்கட்டளை இயக்குனரும், பெருந்துறை ஒன்றிய குழு உறுப்பினருமான சண்முகப்பிரியா ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார்.

peru

தீபாவளி பரிசு பொருட்களில் தாம்பூலத் தட்டு, சேலை, வேஷ்டி. சட்டை, ஸ்வீட் பாக்ஸ், மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தாம்பூலத் தட்டை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக முன்னாள் அவை தலைவரும், மூத்த நிர்வாகியுமான டிடி ஜெகதீசன், பெருந்துறை ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். வேளாண் விற்பனை வங்கி கூட்டுறவு சங்க தலைவர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பேரூர் செயலாளர்கள் கேஎம் பழனிச்சாமி, கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய துணைத் தலைவர் உமா மகேஸ்வரன், மகளிரணி உமா நல்லசாமி, இளைஞரணி அருணாச்சலம், காஞ்சிக்கோயில் பேரூர் சிவசுப்பிரமணியம், அவைத் தலைவர் மேட்டுப்பாளையம் பாலு, நெசவாளரணி பொன்னுசாமி, விவசாய அணி சாமிநாதன், ஆண்ட முத்து, வார்டு உறுப்பினர் குணசேகரன், மோகனச்செல்வி, கள்ளிப்பாளையம் தேவராஜ், அருண் தர்மா, அண்ணா தொழிற்சங்க தலைவர் தர்மராஜ், கார் மணி, ஜே.பி, கள்ளியம்புதூர் நந்தகுமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி அருணாச்சலம் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.