ஆத்தூரில் குடும்ப தகராறில் பாமக பிரமுகர் வெட்டிக்கொலை - மகன் கைது!

 
Murder

சேலம் மாவட்டம் ஆத்தூரில் குடும்ப தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் மாதையன் மகன் கிருஷ்ணராஜ். பாமக பிரமுகரான இவருக்கு லாவண்யா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், கிருஷ்ணராஜுக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன் ஆத்தூர் சக்தி நகரை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மீனா(46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, கிருஷ்ணராஜ், தனது மனைவியை விவாக ரத்து செய்து,விட்டு மீனாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். மீனாவுக்கு முதல் கணவர் மூலம் விக்னேஷ்(28) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்னேஷ், அங்குள்ள இறைச்சி கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 

Attur gh

இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜ், மனைவி மீனாவை தாக்கி உள்ளார். அப்போது, விக்னேஷ் தனது தாயை தாக்க வேண்டாம் என கூறியபோதும், அவர் மீனாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கிருஷ்ணராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 தகவல் அறிந்து வந்த ஆத்தூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாமக பிரமுகரை, அவரது மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.