திண்டுக்கல்லில் ஜனவரி 3-இல் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

 
dindigul

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 3.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சென்னை ஒய்வூதிய இயக்குநர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.

dindigul

ஒய்வூதிய பலன்கள் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட முகவரி, கடைசியாக பணிபுரிந்த துறை / அலுவலகம், ஓய்வுபெற்ற நாள், கொடுப்பாணை எண், பெறப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் யாரிடம் நிலுவையில் உள்ளது உள்ளிட்ட அனைத்து விபரங்களை தங்கள் தொலைபேசி / கைபேசி எண்களுடன் (இரு பிரதிகளில்) 26.12.2022 -ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவர்களிடம் விண்ணப்பித்து, குறைகளை தீர்வு கண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.