பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை... அருப்புக்கோட்டை அருகே சோகம்!

 
poison

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெற்றோர் கண்டித்தால் விஷம் குடித்த பிளஸ் 2 மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் பெத்து கவிப்பிரியா(17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பெத்துகவிபிரியா படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை தாய், தந்தை கண்டித்து படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

madurai gh

இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த 10ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பெத்து கவிப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.