கயத்தாறு அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமங்கலகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் மகேஷ்வரி(17). இவர் கழுகுமலையில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இதற்காக தெற்கு கோணார்பட்டி பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி, பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மகேஷ்வரி சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது தந்தை மீண்டும் தெற்கு கோணார்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் வந்து விட்டுள்ளார். இந்த நிலையில், அன்று இரவு வீட்டில் மகேஷ்வரி தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார். 

kovilpatti

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு கயத்தாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மகேஷ்வரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் கயத்தாறு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.