லால்குடி அருகே பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை... கூலி தொழிலாளி போக்சோவில் கைது!

 
arrest

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மேலரசூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி. இவரது 17 வயது மகள், மால்வாய் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிந்ததால் வீட்டில் இருந்து வந்த மாணவி, சம்பவத்தன்று மதியம் வீட்டில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது, அதே கிராமத்தை  சேர்ந்த கூலி தொழிலாளி பிச்சைமணி மகன் முத்து (50) என்பவர் வீடு புகுந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

women Rape

அதன் பேரில், ஆய்வாளர் மாலதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி முத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.