பெற்றோர் கண்டித்ததால் பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை... குன்னம் அருகே சோகம்!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழ பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகன் சதிஷ்(18). இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சதிஷ், அடிக்கடி கல்லுரிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்து, கல்லூரிக்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த சதிஷ் கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சதிஷ் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.