திண்டுக்கலில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் விசாகன் தகவல்!

 
dindigul

திண்டுக்கல் மாவட்ட வேலைவைய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு நாளை நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை, தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இந்த முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தேவையான  நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களின் சுய விபரக் குறிப்புகளுடன் கூடிய விண்ணப்பம், அனைத்து கல்விச்சான்றுகள் மற்றும்  ஒளிநகல் (ஜெராக்ஸ்) - களுடன் நேரில் கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம். மேலும், இம்முகாமில் மத்திய மற்றும் மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு இலவச திறன் எய்தும் பயிற்சிக்கும் பதிவு செய்து கொள்ளலாம்.

dindigul

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார்  துறை வேலை வாய்ப்பளிப்போர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தினையும், திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அலைபேசி எண் : 94990 55924 வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணியமர்த்தம் செய்யப்படுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசு துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு  விதிமுறைகளின்படி பரிந்துரை செய்யப்படும். மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ளும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் பதிவில் விடுபாடுகள் மற்றும் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உடனடியாக சரி செய்து தரப்படும்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் பதிவுதாரர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளி பின்பற்றி முகாமில் பங்கேற்று, தனியார் துறையில் பணி வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.