தேனி அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதல் - இருவர் பலி!

 
accident accident

தேனி மாவட்டம் போடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனுர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் மற்றும் பாலு. உறவினர்களான இருவரும் மாடு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இருவரும் சிலைமலை பகுதியில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் பகுதியில் சென்றபோது மணிகண்டன் வானத்தின்  மீது எதிரே பெரியகுளம் நோக்கி சென்ற தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

dead body

இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன், பாலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போடி தாலுகா காவல் நிலைய போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஒட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.