சிறுமி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

 
tenkasi

ஆலங்குளம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேல கரும்புலியூத்து கிராமத்தை சேர்ந்தவர் தேவகுமார்(30). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

arrested

இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து நேற்று நீதிபதி அன்புச்செல்வி, குற்றவாளி தேவகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.