பென்னாகரம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினர் கைது!

 
rape

தருமபுரி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த உறவினரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள நடேசன் காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார். கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகளான இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த பெண்ணை தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்ட பிரவீன்குமார், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செயது வந்ததாக கூறப்படுகிறது.

arrested

மேலும், அந்த பெண்ணின் சம்பள பணத்தையும் பெற்றுக்கொண்டு, ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தருமபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வனை நேரில் சந்தித்து புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின் பேரில், புகார் தொடர்பாக பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பிரவீன்குமார் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இளம் பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரவீன்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.