சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.41 கோடி வசூல்!

 
samayapuram

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.41 கோடி ரொக்கம், இரண்டே முக்கால் கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி ஆகியவை வசூலாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனை தரிசித்து, நேர்த்திக்கடன் செலுத்துவர். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் ஒரு முறை எண்ணப்பட்டு வருகிறது.

hundial

 அதன்படி, நேற்று கோயில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 635 ரொக்கப்பணம் வசூலானது. மேலும், 2 கிலோ 879 கிராம் தங்கமும், 5 கிலோ 197 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. அத்துடன் 112 வெளி நாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலானதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.