சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.05 கோடி வசூல்!

 
samayapuram

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.05 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம் மற்றும் 2 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.

hundial

அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் இரு முறை எண்ணப்பட்டு வருகிறது. இதன்படி, இம்மாதம் 2-வது முறையாக 56 காணிக்கை உண்டியல்களை எண்ணும் பணி நேற்று கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு எண்ணினர்.

இதில் கடந்த 9 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே, 5 லட்சத்து, 17 ஆயிரத்து 705 வசூலானது. அத்துடன், 2 கிலோ 211 கிராம் தங்கம், 2 கிலோ 273 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைக்கப்பெற்ற நிலையில், 56 அயல்நாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலாகியது. இந்த தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்